என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நன்னீரில் கழிவுநீர் கலக்காத மாவட்டமாக மாற்ற மக்கள் முன்வர வேண்டும் - குமரி கலெக்டர் அரவிந்த் அறிக்கை
- வீடுகள், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் மிக அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.
- சுகாதார சீர்கேடு ஏற்படு வதிலிருந்து நிலத்தையும், நீரையும் காப்பது நமது தலையாய கடமையாகும். இது குறித்து தற்போது மிகவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை, பருவநிலை மாற்றம், நாகரீகத்தின் நவீன பாதிப்பு, அதிகரித்து வரும் கட்டு மானங்கள், ஏனைய காரணங்களினால் வீடுகள், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் மிக அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.
இது மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள் ளது. குடியிருப்பு பகுதி களில் இருந்தும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேற்றப்ப டும் கழிவுநீர் கால்வாய்களிலும், குழாய்கள் மூலம் வாய்க்கால்களிலும் கலக்கப்படுவதால் நீர் மாசடைந்து, பாசன நிலங்களும் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
விவசாய நிலம் பாதிக்கப்பட்டு உற்பத்திலும், உணவிலும் நச்சு கலக்கும் அபாயம் ஏற்படுகிறது. மனிதர்கள் குடிக்கும், குளிக்கும் நீரில் சாக்கடைநீர் கலந்து வருவதால் நோய் பாதிப்புகள் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. மேலும் பொது இடங்களில் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் அவ்விடம் மழைக்கா லங்களில் சேறும் சகதியு மாக காட்சியளித்து கொசுக் கள் உற்பத்தியாக வழி வகுக்கிறது.
சுகாதார சீர்கேடு ஏற்படு வதிலிருந்து நிலத்தையும், நீரையும் காப்பது நமது தலையாய கடமையாகும். இது குறித்து தற்போது மிகவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் பொருட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் ஆகிய வற்றில் இருந்து உருவாகும் கழிவுநீரினை அதனை உருவாக்குபவர்களாலேயே முறையாக கையாளும் வகையில் அக்கட்டிடங்களில் இருந்து கழிவுநீர் பொது இடத்தில் வெளியேறாமல் தடுக்க கட்டிட உரிமையா ளரால் கழிவுநீர் உறிஞ்சு குழி அமைக்கவும், மீறும் இடங்களில் நிர்வாக அலுவலர்கள் மூலம் கழிவு நீர் வெளியேறும் முகப்பினை அடைக்கவும் 01.09.2022 முதல் 09.09.2022 வரை சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
எனவே, இதற்கு பொது மக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்கி கன்னியாகுமரி மாவட்டத்தை நன்னீரில் கழிவுநீர் கலக்காத மாவட் டமாக மாற்றிட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்