search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாசற்ற தீபாவளி கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
    X

    மாசற்ற தீபாவளி கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

    • கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
    • பாதுகாப்பாக பட்டாசு வெடியுங்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    குமரி மாவட்டத்தில் பட் டாசு விற்பனையை கண் காணிக்க 18 குறுவட்டங் களுக்கும் தனி தாசில்தார் கள், காவல்துறை அதிகா ரிகள், தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் சம் பந்தப்பட்ட குறுவட்ட ஆய் வாளர்களை கொண்ட 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளது. இக்குழுவினர் தங்க ளது பகுதிக்குட்பட்ட பட்டாசு சில்லறை விற்பனை கடைகள், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண் டும்.

    இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட்ட தற்காலிக உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு விற்பனை செய்யும் இடங்கள், விற்பனையா ளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதை உறுதி செய்திட வேண்டும்.

    பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குறைந்த ஒலியுடனும், புகையில்லாத குறைந்த அளவில் காற்று மாசுபாடு இல்லாத தன்மை கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அவரச காலங்களில் கட்டணமில்லா தொலை பேசி எண் 112-ஐ பொது மக்கள் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்ககூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள் வழி பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதிகாக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்க ளுக்கு அருகில் பட்டாசு வெடிக்ககூடாது. சீனப் பட்டாசுகளை தவிர்த்திட வேண்டும்.

    விற்பனையாளர்கள் உரிமம் வழங்கப்பட்ட இடத் தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கடை களில் செல்போன் உப யோகிக்க கூடாது. கடையின் முன் வாகனங்கள் நிறுத்து வதை தவிர்த்திட வேண்டும். பட்டாசு அதிர்வேட்டு போன்ற வெடிபொருட் களை உரிமம் பெறாத இடத்தில் தயார் செய்யக் கூடாது. எக்காரணம் கொண்டும் ஓலையால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது. பொதுமக்கள் சுற்றுச்சூழ லுக்கு அதிக மாசு ஏற்ப டுத்தாக பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபா வளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    Next Story
    ×