search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள்
    X

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள்

    • பள்ளிகள் திறப்பது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் இன்று மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
    • பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளன்று மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்டத்திலும் பள்ளிகள் திறப்பது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள சுமார் 1118 பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு தயாராகி வருகிறார்கள். பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்த கங்களை பள்ளி திறப்ப தற்கு முன்னதாகவே வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தோவாளை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு வழங் கப்படும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பள்ளிகள் திறப்பது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி, தொடக்கக் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    பள்ளிகள் திறப்பதற்கு முன்பு என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தற்போது கொரோனா மீண்டும் பரவத் தொடங்கி உள்ள நிலையில் என்னென்ன முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

    மேலும் பள்ளிகளை திறந்து சுத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளன்று மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×