search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ராகுல்காந்தி கன்னியாகுமரி வருகை
    X

    ராகுல்காந்தி கன்னியாகுமரி வருகை

    • மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் பிரமாண்ட வரவேற்பு வழங்க வேண்டும்
    • நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    கன்னியாகுமரி:

    ராகுல் காந்தி குமரி மாவட்டம் வருகையை ஒட்டி ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஜிகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜிஜி முன்னிலை வகித்தார்.

    தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, துணைத் தலைவர்கள் அனீஸ் ராஜன், ஜெயசிங் ராபர்ட், வட்டாரத் தலைவர்கள் பிரேம் சிங், ஈஞ்சக்கோடு தாஸ், சுரேஷ், சிபிமோன், வழக்கறிஞர் ஜெஸ்டின் ரேம், முத்தலக்குறிச்சி ஊராட்சி தலைவர் சிம்சன், பாகோடு பேரூராட்சி முன்னாள் தலைவர் மோகன் தாஸ், மற்றும் நிர்வாகிகள் சுஜூ மோகன், சந்தோஷ், ரெஜி, மது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராகுல் காந்தி வருகையை ஒட்டி தேசிய நெடுஞ்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கேட்டும், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் மாவட்டத் தலைவர் அஜிகுமார் தலைமையில் நிர்வாகிகள் 1000 பேர் சுங்காங்கடை தேசிய நெடுஞ்சாலையில் ராகுல் காந்திக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது, வரவேற்பு பாதையில் பஞ்சாயத்து ராஜ் சங்கதன் நிர்வாகிகள் தூய்மைப் பணிகளை விதிமுறைகளுக்கு உட்பட்ட செய்வது, ராகுல்காந்தியின் பாதயாத்திரை குறித்து கிராமம் தோறும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,

    பாதயாத்திரையை ஒட்டி குமரி மாவட்டம் வரும் வெளி மாநில, வெளி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×