search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதுகாப்பான முறையில் ரெயில்வே தேர்வுகள் நடக்கிறது
    X

    பாதுகாப்பான முறையில் ரெயில்வே தேர்வுகள் நடக்கிறது

    • சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பு
    • தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது :-

    ரெயில்வே தேர்வு வாரி யம் லெவல் 1 (முந்தைய குரூப் D) ஆட்சேர்ப்புக்கான கணினி அடிப்படையி லான தேர்வை நடத்துவதற்கு புகழ்பெற்ற நிறுவனத்தை நியமித்துள்ளது.

    இதில் 1.1 கோடிக்கும் அதிகமான விண்ணப்ப தாரர்கள் தேர்வு எழுதுகின்றனர். 12 மண்டல ரெயில்வேகளை உள்ளடக்கிய தேர்வு மூன்று கட்டங்கள் ஏற்கனவே முடிக்கப் பட்டுள்ளன. நான்காவது கட்டம் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்கியுள்ளது. எந்தவிதமான முறைகே டுகளையும் தடுக்க மற்றும் அகற்றுவதற்காக பல்வேறு பாதுகாப்புகள் கட்ட மைக்கப்பட்டுள்ளன.

    விண்ணப்பதாரர்களுக்கு மையத்தின் ஒதுக்கீடு கணினியில் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படுகிறது மேலும், தேர்வர்கள் தேர்வுமையத்தில் அறிக்கை செய்து தங்களைப் பதிவு செய்த வுடன், ஆய்வகம் மற்றும் இருக்கைகள் ஒதுக்கீடும் ரேண்டமாக இருக்கும். வினாத்தாள் மிகவும் பாது காக்கப்பட்ட வடிவத்தில் உள்ளது விண்ணப்பதாரரைத் தவிர வேறு யாரும் வினாத்தாளை அணுக முடியாது.

    தேர்வர்களுக்குக் கிடைக்கப்பெறும் வினாத் தாளில் உள்ள வினாக்க ளின் வரிசையும் ரேண்ட மாக மாற்றப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் உள்ள ஒவ்வொரு விண்ணப்பதார ருக்கும் தனிப்பட்ட வினாத் தாள் உள்ளது. எனவே, முதன்மை வினாத்தாளில் உள்ள கேள்வி வரிசையி லிருந்து வரிசை முற்றிலும் வேறுபட்டது.

    தேர்வுகள் சி.சி.டி.வி. கேமராக்களின் கடுமையான கண்காணிப்பின் கீழ், ஒவ்வொரு தேர்வரின் முழுப் பதிவும் நடத்தப்படுகின்றன. இது தவிர, தேர்வர்கனின் செயல்பாடுகளை கண்காணிக்க ஒவ்வொரு மையத்திலும் ரெயில்வே தனது சொந்த ஊழியர்களையும், தேர்வுகளை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக தேர்வு நடத்தும் ஏஜென்சி ஊழியர்களையும் நியமித்துள்ளது.

    விண்ணப்பதாரர்கள், சட்ட விரோதமான முறை யில் பணி நியமனம் என்ற போலி வாக்குறுதிகளை, தவறான செய்திகளைக்கவ னத்தில் கொள்ளாமல், தவ றான வழியில் வழிநடத்த முயல்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    29-ந் தேதி அன்று ரயில்வே தேர்வு வாரியம் இணையதளங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் ஏற்கனவே தேர்வர்களுக்கு இந்த விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×