search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கன்னியாகுமரியில் மழை நீடிப்பு
    X

    கன்னியாகுமரியில் மழை நீடிப்பு

    • சிற்றார்2-ல் 23.6 மி.மீ. மழை
    • திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு சாரல் மழை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருகிறது.

    சிற்றார்-2ல் அதிகபட்சமாக 23.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றார் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    Next Story
    ×