search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் இந்து முன்னணி சார்பில் பேரணி
    X

    இரணியல் இந்து முன்னணி சார்பில் பேரணி

    • 1993-ம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டு பகுதியில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது
    • இச்சம்பவத்தில் குமரி பாலன் பலியானார்.

    கன்னியாகுமரி:

    கடந்த 1993-ம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டு பகுதியில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான குமரி பாலன் நினைவு தினத்தை முன்னிட்டு குருந்தன்கோடு இந்து முன்னணி சார்பில் திங்கள் நகரில் பயங்கரவாத எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகன், செந்தில்குமார், ராஜ்குமார், ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட பொது செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராஜேஸ்வரன், நெட்டாங்கோடு மணி உட்பட 100 பேர் மோட்டார் சைக்கிளில் ராதாகிருஷ்ணன் கோவிலில் இருந்து காட்டாத்துறை சென்று குமார் கோவில் பிரம்மபுரம் சென்று அடைந்தது. இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×