search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புனித தேவசகாயம் மக்கள் திருவிழா
    X

    புனித தேவசகாயம் மக்கள் திருவிழா

    • நட்டாலத்தில் நாளை நடக்கிறது
    • மாத்திரவிளை மறைவட்ட மக்கள் சார்பில் ஏற்பாடு

    கன்னியாகுமரி:

    குழித்துறை மறை மாவட்டம் மாத்திர விளை மறைவட்ட மக்கள் சார்பில் புனித தேவசகாயம் மக்கள் திருவிழா நட்டாலத்தில் நாளை (21-ந் தேதி) நடக்கி றது. இதுசம்பந்தமாக மாத்திர விளை மறைவட்ட குருகுல முதல்வர் மரிய வின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

    குழித்துறை மறை மாவட்டம் மாத்திரவிளை மறைவட்ட மக்கள் சார்பில் புனித தேவசகாயம் மக்கள் திருவிழா நட்டாலத்தில் நாளை (21-ந்தேதி) நடக்கி றது. விழாவை யொட்டி நாளை மதியம் 2 மணிக்கு புனிதரின் பிறந்த பூமியில், புனித தேவசகாயம் ஆளு மையும், பண்புகளும், நமக்கு விடுக்கும் சவால்க ளும் என்னும் தலைப்பில் இறையியல் பேராசிரியர் தே. அல்போன்ஸ் கருத்து ரை வழங்குகிறார். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தமிழ் மலங்கரை கலை தொடர்ப கம் வழங்கும் புனித தேவ சகாயமே என்னும் திரைப்படம் வெளியீடு நடைபெறுகிறது.

    பின்னர் வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமை யில், திருத்தல அதிபர் றசல்ராஜ் முன்னி லையில் மாபெரும் ஆடம்பர திருப்பலி நடை பெறுகிறது. ஜார்ஜ் பொன்னையா மறையுரை நிகழ்த்துகிறார். கில்பர்ட் லிங்சன், மரிய அற்புதம், ரொமரிக் ததேயுஸ், இயேசு மரியான், தோமஸ், ஷிஜின், தானி யேல் ஆசீர்வாதம், றீகன் மோரீஸ், ஜியோ கிளிட்டஸ், ஜஸ்டின் பிரபு, ஜோவின் ஸ்டீபன் மற்றும் பலர் இணைந்து திருப்பலி நிறைவேற்றுகின்றனர். மாத்திரவிளை மறை வட்டத்தை சேர்ந்த 23 பங்குகளிலிருந்தும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறைமக்களும், புனித தேவசகாயம் பக்தர்களும் இத்திருப்பலியில் கலந்து சிறப்பிக்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமையில் அருட்பணியாளர்கள் கில்பர்ட் லிங்சன், ஷிஜின், வட்டார மேய்ப்பு பணி பேரவை துணைத்தலைவர் ஜான் கென்னடி, செயலா ளர் வழக்கறிஞர் மரிய அருள்தாஸ், விழாக்குழு உறுப்பினர்கள் ஜஸ்டின், ஜஸ்டஸ், போஸ்,ஜெனிட் டஸ், மரிய ரெத்தி னம் மற்றும் அனைத்து பக்த சபைகள், இயக்கங்கள், அன்பியங்கள், வட்டார அருட்சகோதரிகள் இணைந்து செய்து வரு கின்றனர்.

    Next Story
    ×