search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

    • கடத்தலுக்கு பயன்படுத்திய கார்-ஆட்டோ சிக்கியது
    • போலீசார் தீவிர சோதனை

    கன்னியாகுமரி:

    விளவங்கோடு வட்டவழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் வந்துக் கொண்டிருந்தது.

    அந்த காரை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர், இருந்தும் அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று திருத்தோபுரம் பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

    காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பனச்சமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. ஓட்டுநர் அதிகாரிகளை பார்த்த உடன் ஆட்டோவை சாலையில் நிறுத்தி விட்டு ஓடிவிட்டார்.சந்தேகமடைந்த அதிகாரிகள் ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது. சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கபட்டது.

    ரேஷன் அரிசியை கேரளாவிற்க்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. பிறகு காரிலும் ஆட்டோவிலும் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் கார்- ஆட்டோ, வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர்கள் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×