என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
புயல், மழை எச்சரிக்கை எதிரொலி - மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு
- ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
- குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.
கன்னியாகுமரி :
குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்ற ழுத்த தாழ்வு காரண மாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடு த்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன் வளத் துறை சார்பில் தடையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சின்ன முட்டம், குளச்சல் துறைமுகங்கள் வெறிச்சோடி காணப் பட்டது. வள்ளங்கள், விசைப்படகுகள் கரையோ ரங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.
குளச்சல், முட்டம், தேங்காய் பட்டணம் துறை முகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.
இதே போல ஆரோக்கிய புரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத் துறை, கோவளம், கீழ மணக்குடி, மணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்கலம் துறை போன்ற கடற்கரைகிராமங்களிலும்பெரும்பாலான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கசெல்லவில்லை.
கடல் சீற்றம் குறைந்த நிலை யிலும் மீன்வளத்துறை சார்பில் விதிக்கப்பட்ட தடை தொடரும் நிலையில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்கள் வரத்தின்றி துறை முகங்கள் வெறிச்சோடியே காணப்படுகிறது.
குளச்சல் மீன்பிடி துறை முகத்தில் ஒருசில கட்டு மரம் மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பினர். ஆனாலும் போதிய மீன் வரத்து இல்லை.
குமரி மாவட்டத்தில் வரத்து குறைவு காரண மாக மீன்கள் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது.சாதாரணமாக கிலோ 100-க்கு விலை போகும் சாளை மீன் 230-ரூபாய்க்கும் ரூ.300-க்கு விலை போகும் நண்டு ரூ.500-க்கும், ரூ .150-க்கு விலை போகும் அயலை மீன் ரூ.250க்கும் விற்பனையானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்