என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கைதான தாய், கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு
- பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் சிவக்குமார் அடிக்கடி அந்தப்பெண் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்
- சிவக்குமார் வீட்டில் இருந்த பெண்ணின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33) இவர் மாந்திரீகம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் சிவக்குமார் அடிக்கடி அந்தப்பெண் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று அங்கு சென்ற சிவக்குமார் வீட்டில் இருந்த பெண்ணின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பிளஸ் 2 மாணவியான அந்த பெண் தனது தாயாரிடம் இது பற்றி தெரிவித்தார். ஆனால் அவர் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து வெளிநாட்டில் இருக்கும் தனது தந்தைக்கு மாணவி செல்போன் மூலம் பேசி சம்பவம் பற்றி தெரிவித்தார். தொடர்ந்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவியின் தாயாரும், சிவக்குமாரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் சிவக்குமார் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவின் தாயார் தக்கலை சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்