search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கன்னியாகுமரியில் இன்று கடல் நீர் மட்டம் திடீர் தாழ்வு
    X

    கன்னியாகுமரியில் இன்று கடல் நீர் மட்டம் "திடீர்" தாழ்வு

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடக்கம்
    • சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இன்று காலை விவேகா னந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்து உள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்"என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    இதனால் இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகு நேரமாகியும் தொடங்கப் படாமல் இருந்தது. இந்த நிலையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.

    இதைத்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    இதற்கிடையில் கன்னியா குமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கிய புரம், கோவளம், கீழமணக் குடி, மணக்குடி, பள் ளம் போன்ற கடற் கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாக வும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    Next Story
    ×