என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இரணியல் அருகே மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் 'சஸ்பெண்டு'
- மாணவனின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருபவர் அருள் ஜீவன் (வயது 47). இவர் அப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவனின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கடந்த 14-ந்தேதி எனது மகன் மதிய உணவு இடைவேளையில் உணவு சாப்பிட்டு விட்டு கழிப்பறைக்கு சென்றுவிட்டு வந்துள்ளான்.
அப்போது எனது மகனின் தோளில் கையை போட்ட ஆசிரியர் அருள்ஜீவன் ஆய்வுக்கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவனை தகாத உறவுக்கு ஈடுபடுத்தியதாகவும் இதனால் அவன் வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறி இருந்தார்.
சம்பவம் குறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர் அருள்ஜீவனை, மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்டு செய்து உத்தர விட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்