என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இரணியல் அருகே பஸ் மோதி வாலிபர் படுகாயம்
- டிரைவர் மீது போலீசார் வழக்கு
- பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கன்னியாகுமரி :
பூதப்பாண்டி அருகே உள்ள மத்தியாஸ்நகர் இந்திரா காலனியை சேர்ந்த வர் டேவிட். இவரது மகன் லிஜோ டேவிட் (வயது 23).
பட்டதாரியான இவர் திங்கள்நகரில் ஒரு எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வேலை விஷயமாக வெளியே சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் கடைக்கு திரும்பி வந்து கொண்டு இருநதார்.
மடவிளாகம் இறக்கம் பெட்ரோல் பங்க் அருகில் வரும் போது பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கீழே விழுந்து காயமடைந்த லிஜோ டேவிட்டை அக்கம் பக்கத்தி னர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது தாயார் லிசி டேனிபாய், இரணியல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவரான கிள்ளியூர் அஜிகுமார் (38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்