search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நாளை தொடங்குகிறது
    X

    கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நாளை தொடங்குகிறது

    • கடந்த 2000 -ம் ஆண்டு 133 அடி உயரதிருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.
    • இந்த சிலை கடல் உப்புக் காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. கடந்த 2000 -ம் ஆண்டு 133 அடி உயரதிருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி இந்த சிலையை திறந்து வைத்தார். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்படகில்சென்று இந்தச்சிலையை கண்டு களித்து வருகின்றனர்.


    இந்தச்சிலை கடல் உப்புக் காற்றினால் பாதிப்ப டையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயன கலவை பூசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரசாயன கலவை பூசஅரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனாபரவல் காரண மாக பணி நடைபெறவில்லை. இந்தநிலையில் தற்போது தமிழகத்தில் தி.மு.க அரசு பதவியேற்றதும் இதற்கான பணிகள் துரிதப்படுத்தப் பட்டது. ஒரு கோடி ரூபாய் செலவில்திட்டமிடப்பட்டு உள்ள இந்தப் பணிக்கான டெண்டர் விடப்பட்டது.

    ஆய்வு செய்வதற்காக பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழு சமீபத்தில் கன்னியாகுமரி வந்தது. அந்த குழுவினர் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்து விட்டு விரைவில் ரசாயனக் கலவை பூசும் பணி தொடங்கும் என்று தெரிவித்தனர்.


    இந்த நிலையில் கன்னி யாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள133 அடி உயர திருவள்ளுவர் சிலை யில் ரசாயன கலவை பூசும் பணி நாளை (6-ந்தேதி) தொடங்கப்பட உள்ளது. இந்தப் பணி முடிவடையும் வரை சுமார்5 மாத காலம் சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று திருவள்ளுவர் சிலையை பார்க்க அனுமதி வழங்கப்படாது.

    Next Story
    ×