search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை, மார்த்தாண்டம், பேச்சிப்பாறை பகுதியில் நாளை மின்தடை
    X

    குழித்துறை, மார்த்தாண்டம், பேச்சிப்பாறை பகுதியில் நாளை மின்தடை

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    • மின்கம்பி மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பணி செய்யும் இடங்களுக்கேற்ப மின் விநியோகம் இருக்காது

    கன்னியாகுமரி :

    குழித்துறை, மார்த்தாண்டம், பேச்சிப்பாறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சில பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குழித்துறை மின் பகிர்மான உதவி செயற் பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழித்துறை, மார்த்தாண்டம், பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஆயிரம்தெங்கு, அம்மன்கோவில், துண்டத்தாறாவிளை, கடைவிளை, கபிரியேல்புரம், வள்ளக்கடவு, சாணி, தோட்டச்சாணி, ஆயவிளை, எருமத்துவிளை, குளப்பாறை, உருவிலாங்கோணம், திற்பரப்பு, கிலாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 27) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இதே போன்று ஜூலை 27 முதல் ஜூலை 30 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருமனை பிரிவுக்கு உள்பட்டகொழுந்திவிளை, கிருஷ்ணாநகர், கல்லுநாட்டி, மடவிளாகம், மங்கலத்துவிளை, கிருஷ்ணபுரை, மலைக்கோணம் பகுதிகளில் மின்கம்பி மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பணி செய்யும் இடங்களுக்கேற்ப மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×