என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இன்று காமராஜர் பிறந்தநாள்
- காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு
- விஜய்வசந்த் எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
நாகர்கோவில்:
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையடுத்து நாகர் கோவில் வேப்பமூட்டில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளரும், மேயருமான மகேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம் மற்றும் நிர்வாகிகள் சதாசிவம், இ.என். சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார்கள்.
முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், அவைத்தலைவர் சேவியர் மனோகரன், கவுன்சிலர் அக்ஷயாகண்ணன் மற்றும் நிர்வாகிகள் சுகுமாரன், சாந்தினி பகவதியப்பன், ஜெயசீலன், பொன். சுந்தர்நாத், சகாயராஜ், சந்துரு, ெரயிலடி மாதவன், கலாசெல்வன், வடிவை மாதவன், ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், வக்கீல்கள் சுந்தரம், முருகேஷ்வரன், ஜெயகோபால் உள்பட கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அகில இந்திய போலிங் பூத் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன், காங கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் டி.ஆர். செல்வம் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
பொருளாளர் டாக்டர் சிவகுமார், நிர்வாகிகள் செந்தூர்பாண்டியன், பொன் மாதவன், தினேஷ் முருகன், லீனஸ், சிம்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாநிலச் செயலாளர் மீனாதேவ், மகளிர் அணி மாநில தலைவர் உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாவட்ட துணைத்தலைவர் தேவ் மற்றும் நிர்வாகிகள் அஜித்குமார் கவுன்சிலர்கள் ஐயப்பன், ரமேஷ், தெற்கு மாநகர செயலாளர் ஸ்ரீதர், கிழக்கு மாநகர் தலைவர் ராஜன் உட்பட கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிர்வாகிகள் செல்வக் குமார், மைக்கேல்ராஜ், செண்பகவள்ளி, சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்