search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் தக்காளி விலை மீண்டும் உயர்வு
    X

    நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் தக்காளி விலை மீண்டும் உயர்வு

    • கிலோ ரூ.130 க்கு விற்பனை
    • பூண்டு ரூ. 200-க்கும், சின்னவெங்காயம் ரூ. 150- க்கும் விற்பனை

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தி zலும் காய்கறி களின் விலை உயர்ந்து காணப்படுவதால் பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    குறிப்பாக தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.140 வரை விற்பனையானது. அதன் பிறகு சற்று குறைந்து கிலோ ஒரு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தக்காளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இன்று 10 ரூபாய் உயர்ந்து கிலோ ரூ 130-க்கு விற்பனை யானது. தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணம், வரத்து குறைவு தான் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ள னர். வழக்கமாக பெங்களூரில் இருந்து அதிக அளவு தக்காளிகள் விற்பனைக்கு வரும். தற்பொழுது ஏற்கனவே வரக்கூடிய அளவைவிட 50 சதவீதம் தக்காளியே விற்ப னைக்கு வருகிறது. இதனால் விலை உயர்ந்து காணப்படு கிறது. 28 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ் கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை யானது.

    இதே போல் இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. இஞ்சி கிலோ ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்டது. பூண்டு ரூ. 200-க்கும், சின்னவெங்காயம் ரூ. 150- க்கும் விற்பனையானது. கேரட், கத்தரிக்காய், பீன்ஸ் மற்றும் மிளகாயின் விலை சற்று குறைந்துள்ளது.

    நாகர்கோவில் மார்க்கெட் டில் விற்பனையான காய்கறி களின் விலை விபரம் வருமாறு:-

    கேரட் ரூ.70, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ. 60, பீன்ஸ் ரூ.90, இஞ்சி ரூ.300, பூண்டு ரூ.200, தக்காளி ரூ.130, சின்ன வெங்காயம் ரூ.150, பல்லாரி ரூ.30, உருளைக்கி ழங்கு ரூ.35, தடியங்காய்ரூ.40, வெள்ளரிக்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, புடலங் காய் ரூ. 30, மிளகாய் ரூ. 80, வெண்டைக்காய் ரூ.60, சேனை ரூ.70, பீட்ரூட் ரூ.50-க்கு விற்பனையானது.

    இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நாகர் கோவில் காய்கறி சந்தைக்கு, குமரி மாவட்டத்தின் பல வேறு பகுதிகளிலும் நெல்லை மாவட்டங்களிலும் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். தற் பொழுது குமரி மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. வெளி யூர்களில் இருந்து மட்டுமே காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது. தக்காளியை பொருத்த மட்டில் பெங்களூரில் இருந்து குறைவான அளவில் விற்பனைக்கு வருவதால் விலை உயந்துள்ளது. காய்கறிகள் வரத்து அதி கரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்,

    Next Story
    ×