search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • 4 நாட்கள் தொடர் விடுமுறை
    • கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துஉள்ள கன்னியாகுமரிக்கு வருடந் முழுவதும் சுற்றுலா பயணி கள் வந்து சென்றாலும் சீசன் காலங்களில் மட்டும் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் படையெ டுத்து வந்த வண்ணமாக இருப்பார்கள்.

    அதேபோல் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் மிலாடி நபி விழா, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைவார விடுமுறைநாள் அக்டோபர் 2-ந்தேதி காந்திஜெயந்தி விடுமுறை நாள் என 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக இன்று கன்னியா குமரிக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநிலசுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். ஆனால் மழை மேகம் காரணமாக இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிய வில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமா கும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூ ழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    வட்டக்கோட்டைக்கு இன்று கடல் கொந்தளிப்பு காரணமாக உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×