search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
    • முஸ்லிம் பள்ளிவாசலிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்

    கன்னியாகுமரி :

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கானசுற்றுலா பயணிகள்வந்துகுவிந்தனர். முக்கடலும் சங்கமிக் கும் திரிவேணிசங்கமம் சங்கிலித்துறைகடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சி யை பார்த்து ரசித்தனர்.

    அதன்பிறகு கன்னியா குமரி முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில்அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார் வையிட இன்று காலை 6 மணியில் இருந்தேசுற்றுலாபய ணிகள்படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்கு வரத்துதொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.சுற்றுலாபயணி கள்2மணிநேரம்நீண்ட வரிசையில்காத்தி ருந்து படகில் சென்று விவேகா னந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

    அதேபோல திருவள்ளுவர் சிலையையும் சுற்றுலா பயணிகள் 2மணி நேரம் காத்திருந்து படகில் சென்று பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதே போல விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சிகூடம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி கூடம்பாரத மாதா கோவில் ஆகிய இடங்க ளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசலிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்தபோலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரைப்பகுதியில்சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    Next Story
    ×