search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழியில் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை
    X

    ஆரல்வாய்மொழியில் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

    • ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் உள்ள காற்றாலை அருகே இறந்து கிடந்தார்
    • தேவஅருள் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட்டை சேர்ந்தவர் தேவ அருள் (வயது 53). இவர் நெசவாளர் காலனி பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவரது மகனுக்கு திருமணம் நடந்தது. அதன்பிறகு தேவஅருள் மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்நிலையில் அவர் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் உள்ள காற்றாலை அருகே இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து இறந்திருப்பது தெரியவந்தது. இது பற்றி அக்கம் பக்கத்தினர் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து தேவஅருள் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×