search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே கார் மோதி வியாபாரி பலி
    X

    மார்த்தாண்டம் அருகே கார் மோதி வியாபாரி பலி

    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
    • உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர்

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே உள்ள பயணம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 68) வியாபாரி. இவர் இன்று அதிகாலையில் மார்த்தாண் டம் மார்க்கெட்டுக்கு வியாபாரத்திற்காக சென்று விட்டு சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சொகுசு கார் வேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட அய்யப்பன் பரிதாபமாக பலியானார்.

    இதையடுத்து விரைந்து வந்த மார்த்தாண்டம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×