search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டாரில் பலத்த மழையால் வேரோடு சாய்ந்த மரம்
    X

    திருவட்டாரில் பலத்த மழையால் வேரோடு சாய்ந்த மரம்

    • அயனிமரம் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையில் பலத்த சத்தத்துடன் வேரோடு சாய்ந்தது.
    • மரம் கீழே விழுந்ததால் அப்பகுதி வழியே மக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள நந்தவனம் உள்பட அருவிக்கரை-சாரூர் சானல் கரையையொட்டி 60 ஆண்டுகள் பழமையான அயனி மரம் ஒன்று நின்றிருந்தது. இந்த அயனிமரம் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையில் பலத்த சத்தத்துடன் வேரோடு சாய்ந்தது.

    அந்த நேரம் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாததால் அதிர்ஷ்ட வசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை. தற்போது இந்த மரம் கீழே விழுந்ததால் அப்பகுதி வழியே மக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர்.

    எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மரத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×