search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் 10 இடங்களில் கரைக்க அனுமதி
    X

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் 10 இடங்களில் கரைக்க அனுமதி

    • கடும்  கட்டுப்பாடுகள்  அறிவிப்பு
    • ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையடுத்து விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு இந்து அமைப்பு கள் தயாராகி வருகிறது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கும் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைப்ப தற்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள் ளது.

    இதுகுறித்து கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்ச ரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்ப தில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர்ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண் டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழி காட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனவே பொது மக்க ளுக்கு கீழ்கண்டவாறு வேண்டுகோள் விடப்படு கிறது .

    * களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப் பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    * சிலைகளின் ஆபரணங் கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பள பளப்பாக மாற்று வதற்கு மரங்களின் இயற்கை பிசின் கள் பயன்படுத்தப்படலாம்.

    * ஒரு முறை பயன்ப டுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    * சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சு களை கண்டிப்பாக பயன் படுத்தக்கூடாது . சிலை களின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலு குகந்த நீர் சார்ந்த, மக்கக்கூ டிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண் டும்.

    * சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட் கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப் பட்ட அலங்கார ஆடை கள் மட்டுமே பயன்ப டுத்தப்படவேண்டும்.

    * விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப் பாடு வாரியத்தின் விதிமுறை களின்படி கரைக்க அனும திக்கப்படும்.

    * விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை கடற்கரை, சின்னவிளை கடற்கரை, சங்குதுறை கடற்கரை, பள்ளிகோணம் கடற்கரை வெட்டுமடை கடற்கரை, மிடாலம் கடற்கரை, தேங்காப் பட்டணம் கடற்கரை, திற்பரப்பு அருவி மற்றும் தாமிர பரணி ஆறு (குழித்துறை) ஆகிய இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறை களின்படி கரைக்க அனும திக்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். விநாயக சதுர்த்தி விழா வினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டா டும்படி கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

    இவ்வாறு செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

    Next Story
    ×