search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே இளம்பெண் மாயம்
    X

    இரணியல் அருகே இளம்பெண் மாயம்

    • நாகர்கோவிலில் உள்ள தனியார் கார்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள கீழமணியன்குழியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பேபி. மகள் ரேவதி (வயது 20). ரவி இறந்து விட்ட நிலையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் கார்டு நிறுவனத்தில் ரேவதி வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற ரேவதி அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தாயார் பேபி இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×