search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
    X

    விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    • வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் விஷம் அருந்தி வாயில் நுரை பொங்க மயங்கி விழுந்தார்.
    • இரணியல் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி குளுமைக்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55) இவரது மனைவி துளசி. இவர் கடந்த ஆண்டு உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டதாக கூறப்படுகிறது .

    இந்த நிலையில் செல்வ ராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனார். இதனை அவரது உறவினர்கள் கண்டித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் விஷம் அருந்தி வாயில் நுரை பொங்க மயங்கி விழுந்தார்.

    அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் மருத்துவர் கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு செல்வராஜ் இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் ரதீஷ் அளித்த புகாரில் பேரில் இரணியல் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×