search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாழக்குடியில் விஷம் குடித்து  தொழிலாளி தற்கொலை
    X

    தாழக்குடியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    • கூலி தொழிலாளி குடிக்க பணம் இல்லாத மனவேதனையில் விஷம் குடித்தார்.
    • ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தாழக்குடி விளங்காட்டு காலணியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 60) கூலி தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மனைவி சரஸ்வதியிடம் பணம் கேட்டு தகறாறு செய்வது உண்டு. சரியாக வேலைகளுக்கு செல்வது கிடையது.

    சம்பவத்தன்று இசக்கியப்பன் மனைவி சரஸ் வதியிடம் குடிக்க பணம் கேட்டு தகறாறு செய்தார். ஆனால் அவர் பணம் கொடுக்க வில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அவர் விஷம் குடித்தார்.

    இதனால் வாந்தி எடுத்த நிலையில் இருந்த இசக்கியப்பனை உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இசக்கியப்பனின் மகன் சதீஷ் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×