search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆற்றூர் அருகே கல்லூரி வாகனம் மோதி தொழிலாளி பலி - மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்
    X

    ஆற்றூர் அருகே கல்லூரி வாகனம் மோதி தொழிலாளி பலி - மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்

    • மார்த்தாண்டம் நோக்கி சென்ற அந்த வாகனம் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது
    • லெனின் கொடுத்த புகா ரின் பேரில் கல்லூரி பஸ் டிரைவர் விஜயனிடம் திரு வட்டார் போலீசார் வழக்கு பதிவு

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே உள்ள தச்சூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் அருள்ராஜ் (வயது 48).

    இவர் நேற்று மாலை மார்த்தாண்டத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் குலசேகரம் நோக்கி புறப்பட்டார். ஆற்றூர் கல்லுபாலம் பகுதியில் சென்ற போது தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி வாகனம் எதிரே வந்தது.

    மார்த்தாண்டம் நோக்கி சென்ற அந்த வாகனம் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஜான்ஸ்டீபன் அருள்ராஜ் தூக்கி வீசப்பட்டார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

    ஜான்ஸ்டீபன் அருள் ராஜ் உடலைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தி ரிக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். ஜான் ஸ்டீபன் அருள்ராஜின் உறவினர் லெனின் கொடுத்த புகா ரின் பேரில் கல்லூரி பஸ் டிரைவர் விஜயனிடம் திரு வட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×