என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இளம்பெண் திடீர் மாயம்
- கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது
- அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்சை விட்டு இருவரும் இறங்கினார்கள்
நாகர்கோவில் :
நாகர்கோவில் கோட்டார் பட்டகசாலியன்விளை பகுதியை சேர்ந்தவர் கணபதி.இவரது மனைவி பாக்கியம் (வயது 60).
இவர்களது மகள் வனிதா(35). இவருக்கும் முருகன் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.நேற்று வனிதா தனது தாயார் பாக்கியத்துடன் ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கே சாமி கும்பிட்டு விட்டு வனிதாவும் அவரது தாயார் பாக்கியமும் பஸ்ஸில் வந்தனர்.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்சை விட்டு இருவரும் இறங்கினார்கள். அப்போது வனிதா திடீரென மாயமானார். இதையடுத்து பாக்கியம் மகள் வனிதாவை பல்வேறு இடங்களில் தேடினார்.
எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வனிதாவை தேடி வருகிறார்கள்.
அண்ணா பஸ்நிலை யத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்