search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி முகாம்
    X

    கராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி முகாம் நடந்தது.

    கராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி முகாம்

    • பாரம்பரிய தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு.
    • மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை கவர்ந்தது.

    நாகப்பட்டினம்:

    அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் ஆகியவை குறித்து கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி விழுந்தமா வடியிலுள்ள சாய் காய் டூ அட்வர்ஷர் அகாடமி-யில் பிளாக் பெல்ட் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு பயிற்சியாளராக சென்சை நாசர் தீன் கலந்து கலந்துகொண்டு மாணவர்களுக்கு பல்வேறு வகையான சிறப்பு பயிற்சிகளை அளித்தார்.

    தொடர்ந்து கராத்தேவில் கட்டா, ஸ்மித்தே, டீம் கட்டா, பயர் பிரிக்ஸ் பிரேக்,குத்துச்சண்டை, நேரடி சண்டை போட்டிகள் நாட்டுப்புறக் கலையான சிலம்பம் சுற்றுதல், உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்த மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை கவர்ந்தது.

    நாகை அருகே அழிந்து வரும் தற்காப்பு கலையை மீட்டெடுக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாம் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    விழாவினை அகில இந்திய கராத்த சங்கத்தின் உடைய டெக்னிக்கல் டைரக்டர் மற்றும் தமிழ்நாடு கராத்தே சங்கத் தலைவருமான எஸ் சாய் புருஸ் துவக்கி வைத்தார். ஆசிய கராத்தே நடுவர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை நாகை மாவட்ட கரத்தைச் சங்கத் தலைவர் சென்சாய் ராஜா செய்திருந்தார்.

    Next Story
    ×