search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் மாவட்டத்தில் இன்று 1700 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள்
    X

    கரூர் மாவட்டத்தில் இன்று 1700 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள்

    • தமிழகத்தில் இந்தத் தேர்வினை 1.47 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
    • பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு 5.20 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    கரூர்:

    இந்தியாவில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் நாடு முழுவதும் 490-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று மதியம் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் இந்தத் தேர்வினை 1.47 லட்சம் பேர் எழுதுகிறார்கள். கரூர் மாவட்டத்தில், வெண்ணைமலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லுாரி, காக்காவாடி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில், இன்று நீட் தேர்வு நடக்கிறது.

    அதில் 1,700 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக அங்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு 5.20 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதற்காக தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆகவே காலை 10 மணி முதலே தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் வரத் தொடங்கி விட்டனர்.

    செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மையத்துக்குள் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக தெரியும் தண்ணீர் பாட்டிலை தேர்வர்கள் எடுத்து வரலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×