search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரவக்குறிச்சி அருகே 18 செம்மறி ஆடுகள் மர்ம சாவு
    X

    அரவக்குறிச்சி அருகே 18 செம்மறி ஆடுகள் மர்ம சாவு

    • அரவக்குறிச்சி அருகே 18 செம்மறி ஆடுகள் மர்மமாக இறந்தன.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி எல்லப்பநாயக்கன்புதுார் பகுதியை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி. விவசாயியான இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் பெருமாள் சாமி என்பவரது தோட்டத்துக்கு அருகே மேய்ச்சலுக்கு சென்ற ராஜேஸ்வரிக்கு சொந்தமான 18 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி அரவக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×