search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுவிற்ற 2 பேர் கைது
    X

    மதுவிற்ற 2 பேர் கைது

    • சட்டவிரோதமாக மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

    கரூர் மாவட்டம் குளித்தலை காவல்நி லையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுப்பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதை கரூர் எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர். அப்போது கோட்ட மேடு பகுதியில் வீட்டின் பின்புறம் மது விற்ற சிவானந்தம் (எ) ஊமையன் (வயது 54) மற்றும் நச்சலூரில் வீட்டின் பின்புறம் மதுவிற்ற இடும்பன் மகன் பொன்னர் (57) ஆகிய 2 பேரை பிடித்த தனிப்படை போலீசார் குளித்தலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் குளித்தலை போலீசார் 2 பேர் மீது வழக்குபதிந்து நேற்று கைது செய்தனர் மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×