என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வாகன விபத்தில் 3 பேர் காயம்
- வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்
- கரூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில்
கரூர்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பாம்பாட்டிப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). தரகம்பட்டியில் உள்ள சீட்டு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று காலையில் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். பாலவிடுதி தரகம்பட்டி நெடுஞ்சாலையில் குரும்பபட்டி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, தரகம்பட்டியில் இருந்து எதிரே வந்த ஈச்சர் வேன் இவர் மீது மோதியது. இதில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்தார். இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகார்படி, ஈச்சர் வேன் டிரைவர் கடவூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை
குளித்தலை அடுத்த, சேப்ளாப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன் (வயது 48). இவர் இருச்கர வாகனத்தில், அதே ஊரை சேர்ந்த தனது நண்பர் வரதராஜன் (53), என்பவரை பின்னால் அமர வைத்து சென்று கொண்டிருந்தார். பெரிய பனையூர் நங்கவரம் நெடுஞ்சா லையில், கன்னிமார் கோவில் அருகே சென்ற போது , எதிரே அதி வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து மாயகிருஷ்ணன் கொடுத்த புகார்படி, திருச்சி இனாம்பு லியூர் போதாவூரை சேர்ந்த கார் டிரைவர் ராஜலிங்கம் மீது குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்