என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது
- கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
- போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்
கரூர்:
கரூர் பெரிய ஆண்டாங்கோவில் அருகே கஞ்சா வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு டிராக்டரை போலீசார் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர். அப்போது அதில் விற்பனைக்காக 23 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா விற்றதாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த சென்ராயன் (வயது 42), மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஜீவானந்தம் (21), போடிநாயக்கனூர் அருகே உள்ள குப்பு நாயக்கன்பட்டியை சேர்ந்த கவாஸ்கர் (20) மற்றும் கஸ்தூரி (43) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய பிரதீப் குமார் (23) என்பவரை தேடி வருகின்றனர்.
தொடர்ந்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 23 கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்திய டிராக்டர், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து 44 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்