search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சட்டவிரோதமாக மது விற்ற 77 பேர் கைது
    X

    சட்டவிரோதமாக மது விற்ற 77 பேர் கைது

    • சட்டவிரோதமாக மது விற்ற 77 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 641 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

    கரூர்:

    மே தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் விடுமுறை என்பதால் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்ட விரோத மது விற்பனை நடக்கிறதா என போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 77 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 641 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக தென்னிலை அருகில் வால்நாய்க்கன்பட்டியில் 3 பேரிடமிருந்து 1 ஆயிரத்து 216 மது பாட்டில்களும், ஆம்னி காரும் பறிமுதல் செய்யப்பட்டன. அரசு உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.பி. சுந்தரவதனம் தெரிவித்தார். இது தொடர்பாக, 04324 296299 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×