search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலி
    X

    மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலி

    • மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்
    • இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் பவித்திரம் குரும்ப பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் லோகேஷ் (வயது 20). இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் லோகேஷ் கரூர்-கோவை சாலை முத்துசோழிப்பாளையம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த லோகேஷ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    Next Story
    ×