search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
    X

    கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

    • கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
    • அவரிடம் இருந்து ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கரூர்:

    கரூர் வஞ்சியம்மன் கோயில் தெருவை ஒட்டியுள்ள அமராவதி ஆற்றங்கரையோரம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கரூரைச் சேர்ந்த இலியாஷ் (வயது 25), என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, இலியாஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×