search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
    X

    கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

    • கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • உதவி இயக்குநர் தலைமையில் நடந்தது

    கரூர்:

    கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    நொய்யல் கால்நடை மருத்துவமனை சார்பில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமபரிப்புத்துறை உதவி இயக்குநர் சரவணக்குமார் தலைமை வகித்தார். கால்நடைபராமரிப்புத் துறை புளனாய்வு பிரிவு உதவி இயக்குநர் வில்வி அருள்குமாரி முன்னிலை வகித்தார். முகாமில் நொய்யல் கால்நடை மருத்துவமனை மருத்துவர் உஷா தலைமையிலான மருத்துவர்கள் 400க்கும் மேற் ட்ட வென்னாடுகள், செம்மறி ஆடுகளுக்கள், கன்றுக்குட்டிகள், நாய்ளுக்கும் தடுப்பூசி மற்றும் சிகிச்சையளித்தனர். கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியும், நோய்கள் குறித்து விழிப்புணர்வும், கால்ந டைகளுக்கு புரதம் சத்து நிறைந்த பசுந்தீவன உற்பத்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிறந்த கன்றுகளுக்கு பரிசுகளும், சிறந்த கால்நடை விவசாயி களுக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மை விருதும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×