search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்
    X

    கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்

    • கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது
    • சிகிச்சை மற்றும் தடுப்பூசி போட்டனர்.

    கரூர்:

    வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை சார்பில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் தவிட்டுப் பாளையத்தில் நடந்தது. மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முரளிதரன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சரவணக்குமார், கால்நடை பராமரிப் புத்துறை புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை டாக்டர் கண்ணன், நொய்யல் கால்நடை மருத்துவமனை டாக்டர் உஷா, கால்நடை ஆய்வாளர் நடராஜன், முத்துக்குமார், உதவியாளர் மீரா ஆகியோர் கொண்ட குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போட்டனர். விவசாயிகளுக்கு கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், கால் நடைகளுக்கு புரதச்சத்து நிறைந்த பசுந்தீவன உற்பத்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    Next Story
    ×