search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கரூர்:

    நெய்தலூர் கிராமம், கட்டாணி மேட்டில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், கருப்பசாமி, வீரமாகாளியம்மன், மலையாள கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவில் புதிதாக கட்டப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் ஊர் மக்கள் பெருகமணி காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து யாகசாலையில் வைத்தனர். பின்னர் முதல் கால பூஜை, 2-ம் கால பூஜை, 3-ம் கால பூஜை, 4-ம் கால பூஜைகள் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் பகவதி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×