search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோகைமலை அரசுபள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி
    X

    தோகைமலை அரசுபள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி

    • தோகைமலை அரசுபள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கருத்தரங்கு நடந்தது

    தோகைமலை:

    தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமை ஆசிரியை வளர்மதி பேரணியை தொடங்கி வைத்தார். திருச்சி மெயின் ரோடு, குளித்தலை - மணப்பாறை மெயின்ரோடு, கடைவீதி, தோகைமலை பஸ் ஸ்டாண்டு வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது. இதில், மனித நேயம் காப்போம், ரத்த தானம் கொடுப்போம், 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்ததானம் கொடுக்க உறுதிமொழி ஏற்போம் என பல்வேறு கோஷங்களை எழுப்பிக்கொண்டு, கையில் பதாகைகளை ஏந்தி, மாணவ, மாணவியர் சென்றனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கருத்தரங்கு நடந்தது. இதில், முசிறி தனியார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவியர் பங்கேற்று பேசினர்.


    Next Story
    ×