search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காய் சிரட்டை கிலோ ரூ.10-க்கு விற்பனை
    X

    தேங்காய் சிரட்டை கிலோ ரூ.10-க்கு விற்பனை

    • தேங்காய் சிரட்டை கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தேங்காய் சிரட்டைகள் மூலம் பொம்மைகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

    கரூர்

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் தேங்காயை பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய் பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். தேங்காய் சிரட்டைகள் மூலம் உண்டியல், பல்வேறு வகையான பொம்மைகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.8-க்கு விற்பனையானது. இந்த வாரம் கிலோ ரூ.10-க்கு விற்பனையாகிறது. தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×