search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி  ஆண்டு விழா
    X

    கல்லூரி ஆண்டு விழா

    • கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமி கல்லூரியில் நடைபெற்றது
    • பல்வேறு பிரிவுகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது

    கரூர்,

    கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமிக் கல்லூரியில் முதலாம் ஆண்டுவிழா நடைப்பெற்றது. திருச்சி மறை மாவட்ட தலைவர் ராஜா மான்சிங் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் உமேஷ் சாமுவேல் ஜெபசீலன் வரவேற்புரை நிகழ்த்தினார்.சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்வினைத் துவங்கி வைத்தனர். விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. பேராயர் ஆணையாளர் சுதர்சன் தலைமையுரை ஆற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் (பொ) முனைவர் சீனிவாசராகவன் சிறப்புரை ஆற்றினார்.திருச்சி தஞ்சை திருமண்டல பொருளாளர் ராஜேந்திரன், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் முனைவர் பால்தயாபரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு பாடங்களில் நூறு சதவீத தேர்ச்சியினை அளித்த ஆசிரிய பெருமக்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.பல்வேறு பிரிவுகளில் சாதனை செய்து வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. வணிக மேலாண்மை துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கண்ணகி நன்றியுரை ஆற்றினார். கரூர் மறை மாவட்ட தலைவர் பாஸ்கர் முடிவு ஜெபத்தினை செய்தார். திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் ஆணையாளர் சுதர்சன் ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இறைமக்கள் செயலர் மற்றும் ஆட்சிமன்ற உறுப்பினர் ஸ்டான்லி மதிசெல்வன், ஆட்சிமன்ற உறுப்பினர் ராஜய்யா, சி.எஸ்.ஐ தொழிற்பயிற்சிப் பள்ளி தாளாளர் கிறிஸ்டோபர் சுரேந்திர குமார், தாராபுரம் தார்ப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் (பொ) முனைவர் விக்டர் லாசரஸ், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சத்தியசீலன், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் நிதியாளர் ஞானராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×