search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தார்-காங்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி
    X

    தார்-காங்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி

    • புகழூர் நகராட்சி பகுதிகளில் தார்-காங்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கியது
    • நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தொடங்கி வைத்தார்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சியில் உள்ள 24- வது வார்டு மூலிமங்கலம் பகுதியில் உள்ள தெருவில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையும், 14 -வார்டு செம்படபாளையம் பகுதியில் தார் சாலை மற்றும் காங்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையும், 5-வது வார்டு கௌதமபுரம் பகுதியில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையும் நடைபெற்றது. பூமி பூஜை விழாவிற்கு புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் புகழூர் நகராட்சி துணைத்தலைவர் பிரதாபன், வார்டு கவுன்சிலர்கள் செல்வக்குமார், மோகன்ராஜ், பூவிழி, புகழூர் நகராட்சி ஓவர்சீயர் ரவி மற்றும் நகராட்சி அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் புகழூர் பேரூர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×