search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொத்தமல்லி சாகுபடி தீவிரம்
    X

    கொத்தமல்லி சாகுபடி தீவிரம்

    வளர்ந்த கொத்தமல்லி தழைகளை, விவசாயிகள் பறித்து,சில்லறை விற்பனை செய்து வருகின்றனர்.

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் கொத்தமல்லி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வரகூர், குழந்தைப்பட்டி, சிவாயம், பஞ்சப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள், பரவலாக கிணற்று நீர் பாசன முறையில் கொத்தமல்லி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.வளர்ந்த கொத்தமல்லி தழைகளை, விவசாயிகள் பறித்து, சிறு சிறு கட்டுகளாக கட்டி, உள்ளூர் வார சந்தைகளில் சில்லறை விற்பனை செய்து வருகின்றனர். கொத்தமல்லி கட்டு ஒன்று 10 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×