search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கிரேன் ஆப்ரேட்டர் பலி
    X

    கிரேன் ஆப்ரேட்டர் பலி

    • சிமெண்ட் நிறுவன கிரேன் பழுது பார்க்கும் பணியின் போது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்,

    கடலுார் மாவட்டம், அத்தனுார் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 34). கிரேன் ஆப்ரேட்டர். இவர் கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே, ஜல்லிப்பட்டியில் உள்ள தனியார் சிமென்ட் நிறுவனத்தில் உள்ள கிரேனில் ஏற்பட்ட பழுதை, சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கிரேன் உதிரி பாகங்கள், தியாகராஜன் தலையின் மீது விழுந்தது. அதில், படு காயமடைந்த தியாகராஜன், திருச்சி அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தியாகராஜனின் மனைவி சங்கீதா கொடுத்த புகாரின்படி, வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×