search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரஷர் தொழிலாளி பலி
    X

    கிரஷர் தொழிலாளி பலி

    • மொபட் மீது லாரி மோதி தொழிலாளி பலியானார்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம், கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைரவன் (வயது 49) கிரஷர் தொழிலாளி. இவர், டி.வி. எஸ்., மொபட்டில், மத்திபாளையம் அருகே க.பரமத்தி கந்தம்பாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக திருவாரூரை சேர்ந்த முத்து குமரேசன் (39) என்பவர் ஓட்டி சென்ற லாரி, மொபட் மீது மோதியது. அதில், சம்பவ இடத்தில் வைரவன் உயிரிழந்தார்.இதையடுத்து, வைரவனின் மனைவி தமிழரசி கொடுத்த புகார்படி, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    Next Story
    ×