search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் மாவட்டத்தில் மானாவரி நிலங்களில் சாகுபடி பணி துவக்கம்
    X

    கரூர் மாவட்டத்தில் மானாவரி நிலங்களில் சாகுபடி பணி துவக்கம்

    • கரூர் மாவட்டத்தில் மானாவரி நிலங்களில் சாகுபடி பணி தொடங்கப்பட்டது
    • எண்ணை வித்து பயிர்கள் சாகுபடி பணிகளிலும், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் தென் மேற்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு தகுந்தார்போல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கோடை மழை பெய்ய துவங்கியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்ட விவசாயிகள் மானாவரி விவசாய நிலங்களில் சாகுபடி பணிகளை துவங்கியுள்ளன. குறிப்பாக அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் முருங்கை சாகுபடி விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. இதுதவிர, எண்ணை வித்து பயிர்கள் சாகுபடி பணிகளிலும், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கரூர் மாவட்ட விவசாயிகள் தென் மேற்கு பருவ மழை காலத்தில் அதிக மழை பெய்ய வேண்டும் என வருண பகவானின் கருணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


    Next Story
    ×