search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் பக்தர் மயங்கி விழுந்து சாவு
    X

    கரூர் பக்தர் மயங்கி விழுந்து சாவு

    • வெள்ளிங்கிரி மலைக்கு சென்றவர் மயங்கி விழுந்து சாவு
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்,

    சித்ரா பௌணர்மியையொட்டி கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலையில் ஏறி சுயம்பு லிங்கத்த வழிபாடு செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ெசல்வார்கள். கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் குமார் (வயது 40). இவர் வெள்ளிங்கிரி மலைக்கு சென்றார். அங்கு மலை ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தார். ஆறாவது மலைக்கு வந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு ஆம்புலன்சில் இருந்த உதவி மருத்துவர் குமாரை பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×